• முகப்பு பக்கம்
  • மொழிகள்
    • English
    • සිංහල
  • தலைப்புகள்
    • கல்வி
    • உடல்நலம்
    • விளையாட்டு
    • வாழ்க்கைமுறை
    • நிதி மற்றும் வர்த்தகம்
    • தற்போதைய நிகழ்வுகள்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • அமைப்பு
    • Fête
    • Team
    • Welfare
    • எங்களை பற்றி
    • தொடர்பில் இருங்கள்
    • கொள்கைகளும் அறிக்கைகளும்
Facebook Twitter Instagram Pinterest LinkedIn WhatsApp Telegram YouTube
SL WebCast தமிழ்
  • முகப்பு பக்கம்
  • மொழிகள்
    • English
    • සිංහල
  • தலைப்புகள்
    • கல்வி
    • உடல்நலம்
    • விளையாட்டு
    • வாழ்க்கைமுறை
    • நிதி மற்றும் வர்த்தகம்
    • தற்போதைய நிகழ்வுகள்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • அமைப்பு
    • Fête
    • Team
    • Welfare
    • எங்களை பற்றி
    • தொடர்பில் இருங்கள்
    • கொள்கைகளும் அறிக்கைகளும்
SL WebCast தமிழ்
Home»வாழ்க்கைமுறை»உலக மனிதாபிமான தினம்
வாழ்க்கைமுறை

உலக மனிதாபிமான தினம்

Shabeeha HarshadBy Shabeeha Harshad19/08/2023Updated:19/08/2023No Comments5 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Telegram

ஐக்கிய நாடுகள் சபையானது 2023ம் ஆண்டுக்குரிய உலக மனிதாபிமான தினத்தின் தொணிப்பொருளாக “NO MATTER WHAT” என்பதனை கொண்டுள்ளது. இத்தொணிப்பொருளானது மக்களுக்கு உதவி புரியும் மனிதாபிமான பணியாளர்கள் வேறு எந்தக் காரணியையும் கருத்திற்கொள்ளாமல் மக்களின் தேவையை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்பதனையே விளக்குகின்றது. 


எனவே இவ்வருடத்திற்கான உலக மனிதாபிமான தினத்தில் நாம் சேவை செய்யும் மக்களானவர்கள், யாராக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும் அவர்களுடன் தோளோடு தோள் நிற்போம்.

உலக மனிதாபிமான தினம் என்றால் என்ன?

மனிதாபிமான பணியாளர்கள் அனர்த்தங்கள், பிரச்சினைகள் மற்றும் அவசர நிலைமையிலுள்ள மக்களுக்கு உதவி பாதுகாப்பு மற்றும் ஆதரவளிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர். உயிர்களை காக்கவும் துன்பங்களை தணிக்கவும் மிகவும் ஆப்த்தான மற்றும் சவாலான பகுதிகளில் தமது பணியை முன்னெடுக்கின்றனர். இம் மனிதாபிமான தினத்தில் இவ் அர்ப்பணிப்பும் தைரியமும் அடையாளம் காணப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வுலக மனிதாபிமான தினமானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 19ம் திகதி அன்று உலகில் நெருக்கடி நிகழும் பகுதிகளில் தமது உயிரை துச்சமென மதித்து அர்ப்பணிப்புடன் பல தியாகங்களை மேற்கொண்டு சேவை புரியும் மனிதாபிமான பணியாட்களை கெளரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இந்நாளானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுகுழுவினால் மனிதாபிமான பணியாளர்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதன் அவசியம் பற்றியும் எடுதுரைக்கவுமே நிறுவப்பட்டது.

மனிதாபிமான உதவி பணியாளர்கள், சுருக்கமாக மனிதாபிமானிகள் என அழைக்கப்படும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓய்வின்றி மிகவும் சவால் நிறைந்த சூழல்களில் பணி புரிகின்றனர்.

 

இவ் அர்பணிப்புள்ள பனியாளர்கள் பலதரப்பட்ட பின்புலங்களில் இருந்தும் வருகின்றனர். இதில் வைத்தியர்கள், தாதிகள், பொறியியளாலர்கள், தளவாட நிபுணர்கள், சமுக சேவையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் அடங்குவர். இவர்கள் சர்வதேச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது உள்ளூர் சமூகங்களில் பணிபுரிபவர்களாக இருப்பர். அவர்களின் பங்களிப்புகளைத்தாண்டி உதவி பணியாளர்கள் அல்லல்களை தணித்து உயிர்களை காப்பாற்றுவதனையே பொதுவான இலக்காக கொண்டுள்ளனர்.



மனிதாபிமான உதவி பணியாளர்கள் தமது பணியில் அன்றாடம் பல்வேறுபட்ட சவால்களுக்கும் ஆபத்துகளுக்கும் முகம்கொடுக்கின்றனர். இவர்கள் எப்போதும் பாதுகாப்பில்லாத அல்லது பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ள பிரதேசங்களில் அதிகம் பணிபுரிகின்றனர். இதன் காரணமாக உதவி பணியாளர்கள் வன்முறை, விரோதம், மற்றும் ஆபத்தான வாழும் நிலைகளை சந்திக்க நேரிடுகின்றனர். அத்தோடு மட்டுமல்லாது இவர்கள் சில சந்தர்ப்பங்களில் அடிப்படை மற்றும் உற்கட்டமைப்பு வசதிகளை பெறுவதிலும் பல்வேறுபட்ட கட்டுப்பாடுகளுக்கு முகல் கொடுப்பதனால் இவர்களின் பணியானது மேலும் சவால் நிறைந்ததாக மாறுகின்றது.


இவ்வாறான சவால்களையும் தாண்டி மனிதாபிமான பணியாளர்கள்  உயிர்காக்கும் சேவைகளான மருத்துவம், உணவு மற்றும் சுகாதார உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன

மனிதாபிமான பணியாளர்கள் எவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்?

அண்மைக்காலமாக மனிதாபிமான பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு உதவிக்கரம் கொடுப்பது ஒரு பாரிய சவால் நிறைந்த செயலாக காணப்படுகின்றது. இத்தாக்குதல்களானது மனிதாபிமான பணியாளர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக அமைவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் சென்றடைவதனையும் கேள்விக்குறியாக்கியுள்ளன. 

மோதல் நிகழும் பகுதிகளில் மனிதாபிமான பணியாளர்கள் குறிவைக்கப்படுவதற்கான பல காரணங்கள் காணப்படுகின்றன.

  1. வளங்கள் மீதான கட்டுப்பாடு

வன்முறை மற்றும் மோதல் நிகழும் பகுதிகளில் அடிப்படை தேவைகளான உணவு, நீர் மற்றும் மருந்திற்கு மட்டுப்படுதப்பட்ட அனுகலே காணப்படுகின்றது. இதன் காரணமாக இவற்றினை கொண்டுவரும் மனிதாபிமான பணியாளர்கள் இவ் அடிப்படை தேவைகளை கொண்டு இலாபமீட்ட அல்லது இவற்றினை கட்டுபடுத்த நினைக்கும் குழுக்களினால் அதிகம் ஈர்க்கப்ப்டுகின்றனர்.

 

  1. அரசியல் ஊக்கம்

வன்முறை நிகழும் பிரதேசங்கள் பல்வேறுபட்ட அரசியல் இலக்குகளுடன் பல வகை பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரிவுகள் அல்லது குழுக்கள் மனிதாபிமான பணியாளைர்களை சர்வதேச சமூகத்தின் ஓர் அடையாளமாகக் கருதுவதுடன், அவர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதன் மூலம் அக்குழுக்களின் நோக்கங்களிற்கான கவனத்தினை ஈர்க்க அல்லது தலையீட்டின் நியாயத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த அவர்களைத் தாக்கலாம்.





  1. சித்தாந்த வேறுபாடுகள்

சில தீவிர போக்குள்ள அமைப்புகள் மனிதாபிமான உதவிகளை அவர்களின் சித்தாந்தங்களிற்கு எதிரான ஒரு விடயமாக கருதுகின்றனர். இத்னால் மனிதாபிமான உதவியாளர்களை தமது எதிரியின் முகவராக எண்ணி அவர்களின் மீது தாக்குதல் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுதுகின்றனர்

  1. உதவிகளுக்கு இடையூறளித்தல்

உதவி பணியாளர்களின் மீது தாக்குதல் மேற்கொள்வதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடைப்படுவதனால் அவர்களுக்குரிய அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் செய்யப்படுகின்றது. இது அப்பிரதேசங்களில் உறுதியற்ற தன்மையினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பாதிக்கப்ப்ட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக ஆயுதக்குழுக்களை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாக்குகின்றது



உலக மனிதாபிமான தினத்தை ஏன் நாம் கொண்டாடுகின்றோம்?

இந்நாள் மனிதாபிமான காரணங்களுக்காக உழைத்து தம் உயிரை தியாகம் செய்த உன்னதமான மனிதர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், மற்றவர்களின் துன்பத்தை போக்குவதில் மனிதாபிமான பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதும் இந்நாளின் நோக்கமாகும்.

 

2003ம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத் நகரில் அமைந்துள்ள ஐநா தலைமயகத்தில் நடந்த குண்டுவெடிப்பின் போது உயிர்நீத்த ஊழியர்களை கொளரவிப்பதற்காக 2008ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் உலக மனிதாபிமான தினம் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து உலகலாவிய மோதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற அவசர நிலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவினை வழங்க தங்கள் உயிரை பணயம் வைக்கும் அனைத்து மனிதாபிமான ஊழியர்களையும் அங்கீகரிக்க இந்நாள் விரிவுபடுத்தப்படுள்ளது.

 

இந்த நாளில் மனிதாபிமானப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக வாதிடவும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் உலகளாவிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சிகளில் குழு விவாதங்கள், கண்காட்சிகள், திரைப்படத் திரையிடல்கள் மற்றும் மனிதாபிமானப் பணியின் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதனையும் நோக்கமாகக் கொண்ட பிற பொது நிகழ்வுகளும் அடங்கும். 

உலக மனிதாபிமான தினம், மனிதாபிமான முயற்சிகளில் உள்ளூர் சமூகங்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பாகவும் செயல்படுகிறது. மிகவும் பயனுள்ள மற்றும் நிலையான சூழலை உறுதி செய்வதற்காக மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது



மனிதநேய தின கொண்டாட்டத்தின் முதலாவது கருப்பொருள் என்ன?

இந்த கருப்பொருள் உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான ஊழியர்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்களை அங்கீகரித்து கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டது. “நாம் மனிதாபிமானப் பணியாளர்கள்” எனும் கருப்பொருளானது, மனிதாபிமானப் பணி என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது அமைப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் அவர்களின் பின்னணி அல்லது தொழிலைப் பொருட்படுத்தாமல் எவரும் மனிதாபிமான முயற்சிகளுக்கு பங்களிக்க முடியும் எனவும் அது வலியுறுத்தியது. தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க தனிமனிதர்களையும் சமூகங்களையும் முடுக்கிவிடவும், தங்கள் சொந்தத் திறனில் நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டது.

இக்கருப்பொருள் மனிதாபிமானப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் அவசியத்தையும் மனிதாபிமான நடவடிக்கைகளில் நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது.

 

2010ம் ஆண்டுக்குரிய உலக மனிதாபிமான தினம், மனிதநேயப் பணியாளர்களுக்கு நன்றியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியது. உலகளவில் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைக் கொண்டாடியது. 



உலக மனிதாபிமான தினமானது மனிதாபிமான நிவாரணப் பணியாளர்களை விட மனிதாபிமான நோக்கத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறதா ?

உண்மையில், இந்த ஆண்டு நினைவு தினத்தில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள் இருக்கக்கூடும் என்று குழு அறிவித்ததால் இது இரண்டும் ஆகும். இருப்பினும், இது முடிவெடுப்பவர்கள், அரசாங்கங்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது பங்களிக்கும் திறன் கொண்ட தனிநபர்களையும் இலக்காகக் கொண்டது.

இளைஞர்கள், ஊடகங்கள் மற்றும் தனியார் துறையினரை மனிதாபிமானப் பணிகளிலும் ஆதரவிலும் அதிக ஈடுபாடு கொள்ள ஊக்குவிப்பதற்காக அவர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப் பிரச்சாரமானது சமூக ஊடகங்கள், நிகழ்நிலை தளங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் உட்பட பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களை, அதன் இலக்கு பார்வையாளர்களை அடையப் பயன்படுத்தும். மனிதாபிமான உதவியால் பயனடைந்த தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் கதைகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சுயவிவரங்கள் இதில் இடம்பெறும். தனிநபர்கள் எவ்வாறு மனிதாபிமான அமைப்புகளில் ஈடுபடலாம், நன்கொடை வழங்கலாம் அல்லது ஆதரவளிக்கலாம் என்பது பற்றிய தகவலையும் இந்த பிரச்சாரம் வழங்கும்.

மேலும், இந்த பிரச்சாரமானது இளைஞர்களுக்கு மனிதாபிமான பிரச்சினைகளைப்பற்றி கற்பிக்க, நிகழ்வுகள், பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்யும் மற்றும் திறம்பட பங்களிக்கத் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் அவர்களை சித்தப்படுத்துகிறது. இது கல்வி நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒத்துழைத்து பயிற்சி, வழிகாட்டல் திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்கு மனிதாபிமான துறையில் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கான பிற வாய்ப்புகளை எளிதாக்கும்.

2023 humanitarian nomatterwhat worldhumanitarianday
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email Telegram
Previous Articleஇளம் கண்டுபிடிப்பாளர்கள்
Next Article சர்வதேச எழுத்தறிவு தினம் 2023
Shabeeha Harshad
  • Website

Journalist

Related Articles

தற்போதைய நிகழ்வுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

25/11/2023By Ishfa Ishak
வாழ்க்கைமுறை

உலக சுற்றுலா தினம்: அதன் கவர்ச்சியான சாராம்சத்தில் ஒரு பயணம்

27/09/2023By Hafsa Rizvi
கல்வி

சர்வதேச எழுத்தறிவு தினம் 2023

08/09/2023By Bishma Bakeer
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இளம் கண்டுபிடிப்பாளர்கள்

17/08/2023By Bishma Bakeer

Comments are closed.

Advertisement
தவறவிடாதீர்கள்
தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

By Ishfa Ishak25/11/2023

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையானது,  உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் ஒரு மனித உரிமை மீறல்…

உலக சுற்றுலா தினம்: அதன் கவர்ச்சியான சாராம்சத்தில் ஒரு பயணம்

27/09/2023

சர்வதேச எழுத்தறிவு தினம் 2023

08/09/2023

உலக மனிதாபிமான தினம்

19/08/2023
நமது மொழிகள்
  • English
  • සිංහල
எங்கள் தலைப்புகளை ஆராயவும்
  • கல்வி
  • உடல்நலம்
  • விளையாட்டு
  • வாழ்க்கைமுறை
  • நிதி மற்றும் வர்த்தகம்
  • தற்போதைய நிகழ்வுகள்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
எங்கள் அமைப்பு
  • Fête
  • Team
  • Welfare
  • எங்களை பற்றி
  • தொடர்பில் இருங்கள்
  • கொள்கைகளும் அறிக்கைகளும்
Facebook Twitter Instagram WhatsApp Telegram YouTube LinkedIn
© 2025 SL WebCast. All rights reserved.Consultation by ExperGen

Type above and press Enter to search. Press Esc to cancel.

Sign In or Register

Welcome Back!

Login to your account below.

Lost password?